• Login
Friday, September 12, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரெஸ்டாரன்ட் முதல் விமானங்கள் வரை…! ஜிஎஸ்டி வரி குறைப்புகளால் எவ்வளவு சேமிக்க முடியும்…? | வணிகம்

GenevaTimes by GenevaTimes
September 5, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ரெஸ்டாரன்ட் முதல் விமானங்கள் வரை…! ஜிஎஸ்டி வரி குறைப்புகளால் எவ்வளவு சேமிக்க முடியும்…? | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

Last Updated:September 05, 2025 10:26 AM IST

உணவகங்களில் சாப்பிடுவது மற்றும் விமானப் பயணம் மேற்கொள்வது விரைவில் பொதுமக்களின் பட்ஜெட்டில் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும்.

Rapid Read
News18News18
News18

சமீபத்திய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள விரிவான வரிவிகித மாற்றங்கள் காரணமாக ரெஸ்டாரன்ட், ஹோட்டல்கள் மற்றும் விமானப் பயணங்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதங்கள் இனி குறைவாகவே இருக்கும்.

இதனால் வெளியே சாப்பிடுவது மற்றும் விமானப் பயணம் மேற்கொள்வது விரைவில் பொதுமக்களின் பட்ஜெட்டில் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும். உணவு மற்றும் பயணத்திற்கான செலவுகள் உச்சத்தில் இருக்கும் பண்டிகை மற்றும் திருமண சீசனுக்கு சற்று முன்னதாக செப்டம்பர் 22, 2025 முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த மாற்றங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உணவகங்களில் முன்பு கேட்டகிரியைப் பொறுத்து உணவுகளுக்கு 12-18%ஆக இருந்த GST, விரைவில் 5% ஜிஎஸ்டிக்கு உட்பட்டவையாக இருக்கும். இதன் அர்த்தம் குடும்பத்துடன் வெளியே சாப்பிடுவது, பண்டிகை மற்றும் சுற்றுலாக்கள் மற்றும் சாதாரண உணவு என உணவு சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தும் இனி மிகவும் மலிவு விலையில் மாறும் என்பதாகும். அதிக வரிகளால் கூட்டம் குறைந்த உணவகங்களுக்கு மீண்டும் அதிக மக்களை இந்த நடவடிக்கை கொண்டுவரக்கூடும்.

அதேபோல ஹோட்டல் கட்டணங்களையும் ஜிஎஸ்டி கவுன்சில் சீரமைத்துள்ளது. ஒரு இரவுக்கு ரூ.1,000 குறைவான விலையில் உள்ள அறைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. அதே நேரம் ரூ.1,000 முதல் ரூ.7,500 இரவு வரை கட்டணம் உள்ள அறைகளுக்கு இப்போது 18%க்கு பதிலாக 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.

மேலும், ரூ.7,500 இரவுக்கு மேல் கட்டணங்களைக் கொண்ட பிரீமியம் ஹோட்டல்களுக்கு 18% வரி தொடர்ந்து இருக்கும். இந்த மாற்றம் நடுத்தர வர்க்க குடும்பங்கள் பண்டிகைகள், திருமணங்கள் மற்றும் விடுமுறைக்கு வெளியே சென்று தங்கும் செலவுகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமான பயணங்கள் மலிவாக மாறுமா?

ஆம், விமான பயணமும் குறிப்பிடத்தக்க பலனை அளிக்கும். ஏனெனில், பொருளாதார வகுப்பு டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி 12%-ல் இருந்து 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. வணிக வகுப்பு டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி 18%இல் இருந்து 12% வரியாக குறைக்கப்படும். இந்த நடவடிக்கை விமானப் பயணத்தை இன்னும் பலருக்கு அணுகக்கூடியதாக மாற்றும். குறிப்பாக பண்டிகை கால உள்நாட்டு பயணங்களுக்கு, அதே நேரத்தில் வணிகப் பயணிகளுக்கு சிறிது நிவாரணம் அளிக்கும்.

இதையும் படிங்க: இல்லத்தரசிகள் கவனத்திற்கு… உயரப்போகும் காய்கறிகளின் விலை…! ஏன் தெரியுமா…?

மொத்தத்தில், இந்த வரி சீர்திருத்தம் சேவைத் துறையில் நுகர்வை அதிகரிப்பதையும், குடும்பங்களுக்கு நேரடி சேமிப்பை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. பண்டிகை காலம் நெருங்கி வருவதால், இந்த நிவாரணம் நுகர்வோருக்கு கணிசமான பலனை அளிக்கும் என்பதால் தேவையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

September 05, 2025 10:26 AM IST

Read More

Previous Post

ஆசியக் கோப்பை : ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியை தொடங்கியது இந்திய அணி.. | விளையாட்டு

Next Post

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்காகவே இந்தியா மீது வரி.. நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு விளக்கம்! | உலகம்

Next Post
உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்காகவே இந்தியா மீது வரி.. நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு விளக்கம்! | உலகம்

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்காகவே இந்தியா மீது வரி.. நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு விளக்கம்! | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin