[ad_1]
Last Updated:
உணவகங்களில் சாப்பிடுவது மற்றும் விமானப் பயணம் மேற்கொள்வது விரைவில் பொதுமக்களின் பட்ஜெட்டில் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும்.
சமீபத்திய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள விரிவான வரிவிகித மாற்றங்கள் காரணமாக ரெஸ்டாரன்ட், ஹோட்டல்கள் மற்றும் விமானப் பயணங்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதங்கள் இனி குறைவாகவே இருக்கும்.
இதனால் வெளியே சாப்பிடுவது மற்றும் விமானப் பயணம் மேற்கொள்வது விரைவில் பொதுமக்களின் பட்ஜெட்டில் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும். உணவு மற்றும் பயணத்திற்கான செலவுகள் உச்சத்தில் இருக்கும் பண்டிகை மற்றும் திருமண சீசனுக்கு சற்று முன்னதாக செப்டம்பர் 22, 2025 முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த மாற்றங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உணவகங்களில் முன்பு கேட்டகிரியைப் பொறுத்து உணவுகளுக்கு 12-18%ஆக இருந்த GST, விரைவில் 5% ஜிஎஸ்டிக்கு உட்பட்டவையாக இருக்கும். இதன் அர்த்தம் குடும்பத்துடன் வெளியே சாப்பிடுவது, பண்டிகை மற்றும் சுற்றுலாக்கள் மற்றும் சாதாரண உணவு என உணவு சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தும் இனி மிகவும் மலிவு விலையில் மாறும் என்பதாகும். அதிக வரிகளால் கூட்டம் குறைந்த உணவகங்களுக்கு மீண்டும் அதிக மக்களை இந்த நடவடிக்கை கொண்டுவரக்கூடும்.
அதேபோல ஹோட்டல் கட்டணங்களையும் ஜிஎஸ்டி கவுன்சில் சீரமைத்துள்ளது. ஒரு இரவுக்கு ரூ.1,000 குறைவான விலையில் உள்ள அறைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. அதே நேரம் ரூ.1,000 முதல் ரூ.7,500 இரவு வரை கட்டணம் உள்ள அறைகளுக்கு இப்போது 18%க்கு பதிலாக 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.
மேலும், ரூ.7,500 இரவுக்கு மேல் கட்டணங்களைக் கொண்ட பிரீமியம் ஹோட்டல்களுக்கு 18% வரி தொடர்ந்து இருக்கும். இந்த மாற்றம் நடுத்தர வர்க்க குடும்பங்கள் பண்டிகைகள், திருமணங்கள் மற்றும் விடுமுறைக்கு வெளியே சென்று தங்கும் செலவுகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆம், விமான பயணமும் குறிப்பிடத்தக்க பலனை அளிக்கும். ஏனெனில், பொருளாதார வகுப்பு டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி 12%-ல் இருந்து 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. வணிக வகுப்பு டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி 18%இல் இருந்து 12% வரியாக குறைக்கப்படும். இந்த நடவடிக்கை விமானப் பயணத்தை இன்னும் பலருக்கு அணுகக்கூடியதாக மாற்றும். குறிப்பாக பண்டிகை கால உள்நாட்டு பயணங்களுக்கு, அதே நேரத்தில் வணிகப் பயணிகளுக்கு சிறிது நிவாரணம் அளிக்கும்.
மொத்தத்தில், இந்த வரி சீர்திருத்தம் சேவைத் துறையில் நுகர்வை அதிகரிப்பதையும், குடும்பங்களுக்கு நேரடி சேமிப்பை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. பண்டிகை காலம் நெருங்கி வருவதால், இந்த நிவாரணம் நுகர்வோருக்கு கணிசமான பலனை அளிக்கும் என்பதால் தேவையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
September 05, 2025 10:26 AM IST