வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்களுக்கான கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமின்றி தொடர்வதாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படலாம் என்று கருதப்பட்டது. இந்நிலையில், குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 6.5 சதவீதத்திலேயே தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 8 வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாத சூழலில், வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லாமல், பழைய நிலையே நீடிக்கும்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த சக்திகாந்ததாஸ், “நிதிக் கொள்கைக் குழுவில் 4:2 என்ற பெரும்பான்மையுடன் ரெப்போ வட்டி விகிதத்தை 6.5%ஆக தொடர முடிவு செய்யப்பட்டதாகவும், இதனால் நிலையான வைப்புத்தொகை வசதி விகிதம் 6.25% ஆகவும், விளிம்பு நிலை வசதி விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.75ஆகவும் உள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தற்காலிக மதிப்பீடுகள் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியை, அதாவது 2023-24ஆம் ஆண்டிற்கான GDP வளர்ச்சியை 8.2% ஆக வைத்துள்ளது. 2024-25ஆம் ஆண்டில், இதுவரை உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் பின்னடைவைத் தக்க வைத்துள்ளன. உள்நாட்டுத் தேவையை வலுப்படுத்தியதன் பின்னணியில் உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன” என்று சக்திகாந்ததாஸ் தெரிவித்தார்.
ஏப்ரல் 2024-ல் 8 முக்கிய தொழில்கள் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. கொள்முதல் நிர்வாகக் குறியீடு, அதாவது உற்பத்தித் துறையில் கொள்முதல் நிர்வாகக் குறியீடு மே 2024-ல் தொடர்ந்து வலிமையாக உள்ளது. கிடைக்கக் கூடிய உயர் அதிவெண் குறிக்காட்டில் இருந்து தெளிவாக தெரிந்தபடி, சேவைத்துறை மிதவையான சூழலை தக்க வைத்துள்ளது. மே 2024ல் கொள்முதல் நிர்வாக குறியீடு சேவைகள் 60.2ஆக வலுவாக இருந்தன. இது செயல்பாட்டில் தொடர்ச்சியானமற்றும் வலுவான விரிவாக்கத்தைக் குறிக்கிறது என்றும் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
இதையும் படிங்க : EPF விதிகளில் புதிய மாற்றம் – இனிமே இதெல்லாம் ரொம்ப ஈஸி!
2024-25 நடப்பு நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி மொத்தமாக 7.2%ஆக இருக்கும் என்றும் ஆர்பிஐ கணித்துள்ளதாக கூறிய அவர், நாட்டின் ஜிடிபி வளர்ச்சி முதல் காலாண்டில் 7.3% ஆகவும், இரண்டாவது காலாண்டில் 7.2% ஆகவும், மூன்றாவது காலாண்டில் 7.3% ஆகவும் மற்றும் நான்காவது காலாண்டில் 7.2% ஆகவும் இருக்கும் என்றும் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)