இந்தியாவில் விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர், இன்று கோடிக்கணக்கான விவசாயிகள் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு அரசு அவ்வப்போது பல சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில் அதிக வருமானத்தைத் தரும் பல்வேறு ஆபத்து இல்லாத சேமிப்புத் திட்டங்களை இந்திய அஞ்சல் துறை உருவாக்கியுள்ளது. கிராம சுரக்ஷா யோஜனா என்பது தபால் அலுவலகத்தால் தொடங்கப்பட்ட, கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் மிகவும் பிரபலமானது.
கிராம பாதுகாப்பு திட்டம்
கிராம் சுரக்ஷா யோஜனா அஞ்சல் அலுவலகத்தின் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படுகிறது. இந்தத் திட்டத்தில், நீங்கள் ஒவ்வொரு நாளும் ரூ.50 முதலீடு செய்யலாம், முதிர்ச்சியின் போது ரூ.35,00,000 தொகையைப் பெறலாம். இத்திட்டம் கிராமப்புற மக்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
யார் முதலீடு செய்யலாம்?
19 வயது முதல் 55 வயது வரை உள்ள எவரும் கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த அஞ்சல் அலுவலக திட்டத்தில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.10,000, அதிகபட்சம் ரூ.10 லட்சம். இந்த திட்டத்தில், பிரீமியத்தை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் டெபாசிட் செய்யலாம்.
இதையும் படிக்க:
பென்ஷன் பணத்தை எப்போது, எப்படி வித்ட்ரா செய்யலாம்..? விதிகள் சொல்வது என்ன?
உங்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்?
இந்தத் திட்டத்தில் ஒரு நபர் ஒவ்வொரு மாதமும் ரூ.1,500 அதாவது தினமும் ரூ.50 முதலீடு செய்தால், திட்டத்தின் முதிர்வு காலத்தில் அவர் ரூ.35 லட்சம் வரை திரும்பப் பெறலாம். நீங்கள் 19 வயதில் ரூ.10 லட்சம் கிராம் சுரக்ஷா யோஜனா வாங்கினால், 55 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,515 பிரீமியம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், 58 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,463 மற்றும் 60 ஆண்டுகளுக்கு ரூ.1,411 டெபாசிட் செய்ய வேண்டும்.
கடன் வசதி
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடன் வசதி கிடைக்கும். பாலிசிதாரர் அதைச் சரண்டர் செய்ய விரும்பினால், பாலிசி தொடங்கிய நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் செய்யலாம். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் திட்டத்தில் போனஸும் கிடைக்கும்.
எப்போது பணம் கிடைக்கும்?
மொத்த பாலிசி தொகையும் அதாவது ரூ.35 லட்சம், 80 வயதை நிறைவு செய்யும் போது, தபால் அலுவலக கிராம் சுரக்ஷா யோஜனாவில் முதலீடு செய்யும் பயனாளியிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஆனால் பலர் அதற்கு முன்பே அந்தத் தொகையைக் கோருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் விதிகளின்படி 55 ஆண்டு முதலீட்டில் ரூ.31 லட்சத்து 60 ஆயிரமும், 58 ஆண்டு முதலீட்டில் ரூ.33 லட்சத்து 40 ஆயிரமும், 60 ஆண்டு முதிர்வு காலத்தில் ரூ.34 லட்சத்து 60 ஆயிரமும் லாபம் கிடைக்கும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
