• Login
Tuesday, August 5, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரூ.3,200 கோடி மதுபான ஊழல் வழக்கில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகன் சைதன்யா கைது | Former Chhattisgarh CM son chaitanya arrested in liquor scam case

GenevaTimes by GenevaTimes
July 19, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ரூ.3,200 கோடி மதுபான ஊழல் வழக்கில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகன் சைதன்யா கைது | Former Chhattisgarh CM son chaitanya arrested in liquor scam case
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் அரசு நடத்​தும் மதுக் கடைகளில் ரூ.3,200 கோடி அளவுக்கு ஊழல் நடை​பெற்று இருக்​கிறது. இந்த ஊழல் வழக்​கில் முன்​னாள் முதல்​வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேல் நேற்று கைது செய்​யப்​பட்​டார்.

சத்​தீஸ்​கர் முழு​வதும் 750-க்​கும் மேற்​பட்ட மதுக்​கடைகளை மாநில அரசு நடத்தி வரு​கிறது. இதற்​காக தனி​யார் நிறு​வனங்​களிடம் இருந்து மது​பானங்​கள் கொள்​முதல் செய்​யப்​படு​கின்​றன. முன்​னாள் முதல்​வர் பூபேஷ் பாகேல் தலை​மையி​லான காங்​கிரஸ் ஆட்​சி​யின்​போது மது​பானங்​களை கொள்​முதல் செய்​த​தில் மிகப்​பெரிய அளவில் ஊழல் நடை​பெற்​ற​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டது.

கடந்த 2023-ம் ஆண்டு டிசம்​பரில் சத்​தீஸ்​கரில் விஷ்ணு தியோ சாய் தலை​மையி​லான பாஜக அரசு ஆட்​சிப் பொறுப்​பேற்​றது. இதன்​பிறகு மது​பான ஊழல் குறித்த விசா​ரணை தீவிரப்​படுத்​தப்​பட்​டது. மாநில பொருளா​தார குற்​றப்​பிரிவு வழக்கு பதிவு செய்து தீவிர விசா​ரணை நடத்​தி​யது.

இதே ஊழல் விவ​காரம் குறித்து அமலாக்​கத் துறை தனி​யாக வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கிறது. இதுதொடர்​பாக முன்​னாள் முதல்​வர் பூபேஷ் பாகேல், அவரது மகன் சைதன்யா பாகேல், மூத்த ஐஏஎஸ் அதி​காரி​கள் உள்​ளிட்​டோரிடம் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் பலமுறை விசா​ரணை நடத்தி உள்​ளனர்.

இதன் தொடர்ச்​சி​யாக சத்​தீஸ்​கரின் துர்க் மாவட்​டம், பிலாய் நகரில் உள்ள முன்​னாள் முதல்​வர் பூபேஷ் பாகேல் வீட்​டில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று திடீர் சோதனை நடத்​தினர். அப்​போது பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேல் கைது செய்​யப்​பட்​டார். இதன்​பிறகு ராய்ப்​பூர் நீதி​மன்​றத்​தில் அவர் ஆஜர்​படுத்​தப்​பட்​டார். அவரை 5 நாட்​கள் போலீஸ் காவலில் விசா​ரிக்க நீதி​மன்​றம் அனு​மதி வழங்​கியது.

இதுகுறித்து அமலாக்​கத் துறை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: கடந்த 2019-ம் ஆண்​டில் சத்​தீஸ்​கரில் காங்​கிரஸ் ஆட்சி நடை​பெற்​றது. அப்​போது ஆட்​சி​யாளர்​களின் அறி​வுறுத்​தலின்​படி மூத்த ஐஏஎஸ் அதி​காரி அனில் துடேஜா, அன்​றைய கலால் துறை தலை​வர் திரி​பா​தி, தொழில​திபர் அன்​வர் தபேர் ஆகியோர் இணைந்து ரகசிய குழு ஒன்றை அமைத்​தனர்.

இந்த குழு, மது​பான ஆலைகளிடம் இருந்து மது​பானங்​களை கொள்​முதல் செய்ய கமிஷன் பெற்று அப்​போதைய ஆட்​சி​யாளர்​களிடம் அளித்​தது. இதன்​படி 12 மது பாட்​டில்​கள் அடங்​கிய ஒரு பெட்​டிக்கு ரூ.75 முதல் ரூ.100 வரை கமிஷன் வசூல் செய்​யப்​பட்​டது. மேலும் அரசு மது​பானக் கடைகளில் போலி ரசீதுகள், போலி மது​பானங்​கள் மூல​மும் மிகப்​பெரிய அளவில் மோசடி நடை​பெற்​றது.

கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை சுமார் ரூ.3,200 கோடிக்​கும் அதி​க​மாக ஊழல் நடை​பெற்​றிருக்​கிறது. இதில் முன்​னாள் முதல்​வர் பூபேஷ் பாகேல் மகன் சைதன்யா பாகேலுக்கு மிக நெருங்​கிய தொடர்பு இருக்​கிறது. இந்த வழக்​கில் 29 அரசு அதி​காரி​கள் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்டு உள்​ளது. வழக்கு தொடர்​பாக சைதன்யா பாகேல் உட்பட இது​வரை 14 பேர் கைது செய்​யப்​பட்டு உள்​ளனர். இவ்​வாறு அமலாக்​கத் துறை வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

முன்​னாள் முதல்​வர் பூபேஷ் பாகேல் கூறும்​போது, “இன்று எனது மகனுக்கு பிறந்த நாள். ஏற்​கெனவே திட்​ட​மிட்டு பிறந்த நாளில் எனது மகனை கைது செய்​துள்​ளனர். சத்​தீஸ்​கரில் அதானி குழு நிலக்​கரி சுரங்க திட்​டத்​துக்கு எதி​ராக எனது மகன் பல்​வேறு போராட்​டங்​களை முன்​னெடுத்​துச் சென்​றார். இதற்கு பழி​வாங்​கும் வகை​யில் அவரை கைது செய்​துள்​ளனர்’’ என்று தெரி​வித்​தார்.



Read More

Previous Post

பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பு அதிகரிப்பு; வெளியான தகவல்

Next Post

ரக்பி யு20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை வழிநடத்தும் கிரிக்கெட் வீரர் ரைலி நார்டன் | Cricketer leads South Africa in Rugby U20 World Cup Riley Norton

Next Post
ரக்பி யு20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை வழிநடத்தும் கிரிக்கெட் வீரர் ரைலி நார்டன் | Cricketer leads South Africa in Rugby U20 World Cup Riley Norton

ரக்பி யு20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை வழிநடத்தும் கிரிக்கெட் வீரர் ரைலி நார்டன் | Cricketer leads South Africa in Rugby U20 World Cup Riley Norton

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin