• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ரூ. 1,700 தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு வர்த்தமானி இடைநிறுத்தம்

GenevaTimes by GenevaTimes
July 4, 2024
in இலங்கை
Reading Time: 3 mins read
0
ரூ. 1,700 தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு வர்த்தமானி இடைநிறுத்தம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


135

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ரூ. 1,700 ஆக அதிகரிப்பது தொடர்பில் தொழில் அமைச்சினால் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதைத் தடுத்து உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

குறித்த சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானிக்கு எதிராக சில பெருந்தோட்ட கம்பனிகள் உயர் நீதிமன்றில் சமர்ப்பித்த மனுவின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியுள்ளது.

குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கிய உயர் நீதிமன்றம், அதற்கமைய அவ்வர்த்தமானியை அமுல்படுத்துவதற்கு இடைக்கால உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ரூ. 1,700 ஆக அதிகரிப்பை உறுதிப்படுத்தும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் (2385/14) கடந்த மே 21ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரின் உத்தரவுக்கமைய, அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

குறித்த அதி விசேட அறிவித்தலுக்கமைய, தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாட் சம்பளம் ரூ. 1,350 ஆகவும் உற்பத்தித்திறன் அடிப்படையில் நாளாந்த விசேட கொடுப்பனவு ரூ. 350 ஆகவும் என, மொத்த நாளாந்த சம்பளம் ரூ. 1,700 அதிகரிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் ரூ. 1700 ஆக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த மே தினத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 1,700 தோட்டத் தொழிலாளர் சம்பளம்; வர்த்தமானி வெளியீடு

2385-14_T

தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ரூ. 1,700 ஆக அதிகரிப்பு



Read More

Previous Post

2021 முதல் 2023 வரை கிட்டத்தட்ட 2,800 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு: சமூக நலத்துறை தகவல் | Makkal Osai

Next Post

ADMK: சேலத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகி! கண்ணீர் விட்டு அழுதபடி ஈபிஎஸ் பேட்டி! சோகத்தில் தொண்டர்கள்!

Next Post
ADMK: சேலத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகி! கண்ணீர் விட்டு அழுதபடி ஈபிஎஸ் பேட்டி! சோகத்தில் தொண்டர்கள்!

ADMK: சேலத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகி! கண்ணீர் விட்டு அழுதபடி ஈபிஎஸ் பேட்டி! சோகத்தில் தொண்டர்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin