Edelweiss MF நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் Shark Tank India நிகழ்ச்சியின் நீதிபதிகளில் ஒருவருமான ராதிகா குப்தா, தன்னுடைய முதலீடு மற்றும் சேமிப்பு விகிதம் குறித்தும் அஸெட் அலோகஷனில் தன்னுடைய அணுகுமுறை குறித்தும், போர்ட்ஃபோலியோ பெர்ஃபார்மன்ஸ் குறித்தும் வெளிப்படையாக சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த பேட்டியின்போது ஆச்சர்யமான தகவல் ஒன்றையும் தெரியப்படுத்தினார். அதாவது இவருடைய இரண்டு வயது மகனின் போர்ட்ஃபோலியோ அவருடைய போர்ட்ஃபோலியோவை விட சிறப்பாக செயல்படுகிறதாம்.
கடந்த ஆண்டில் உங்களின் போர்ட்ஃபோலியோ பெர்ஃபார்மன்ஸ் எப்படியிருந்தது என ராதிகா குப்தாவிடம் கேட்டபோது, 35 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறினார். தன்னிடம் இருந்த பேலன்ஸ்டு மற்றும் சர்வதேச ஃபண்ட் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை எனவும், அதே சமயம் தன்னிடம் இருந்த நடுத்தர மற்றும் சிறு நிறுவன பங்குகள், அந்த இழப்பை பதிலீடு செய்ததாகவும் ராதிகா தெரிவித்துள்ளார். 35 சதவிகிதம் என்பது நல்ல வளர்ச்சி என்றே தான் நினைப்பதாகவும், பங்குச்சந்தையில் நல்ல வருடமும் மோசமான வருடமும் மாறி மாறி வரும், பொதுவாக பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் சராசரியாக 12 முதல் 15 சதவிகித லாபம் கிடைக்கும் எனவும் கூறுகிறார் ராதிகா.
இதையும் படிக்க:
2024ல் உலகில் அதிகம் சப்ஸ்கிரைபர்களை பெற்ற முதல் 10 யூடியூப் சேனல்கள்! – லிஸ்ட் இதோ
உங்கள் மகனுடைய போர்ட்ஃபோலியோ உங்களுடையதை விட சிறப்பாக செயல்படுவதாக கூறினீர்களே, அதைப்பற்றி விளக்கமாக கூற முடியுமா என ராதிகாவிடம் கேட்டபோது, கடந்த வருடம் அவனுடைய போர்ட்ஃபோலியோ 45 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அவனது போர்ட்ஃபோலியோவில் நீண்ட கால நோக்கிலான திட்டங்களில் முதலீடு செய்துள்ளோம். அதனால் தைரியமாக ரிஸ்க் எடுக்க முடியும். எப்போதுமே ரிஸ்க் அதிகமாக இருக்கும் திட்டங்கள் அதிக லாபத்தை தரும் தானே என்கிறார்.
இதற்கிடையில், தன்னுடைய மகனின் பெயரில் சொந்தமாக ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி கணக்கு இருப்பதாகவும், என்னுடைய மகனின் முதலீடுகள் அனைத்தும் அவனது பெயரில்தான் இருப்பதாகவும், கடந்த வருடம் கூட அவனுக்கு வருமான வரி செலுத்தினோம் எனவும் கூறுகிறார் ராதிகா குப்தா.
இதையும் படிக்க:
மிளகாய் முதல் மஞ்சள் வரை.. இந்தியாவில் மசாலா பொருட்கள் உற்பத்தி மாநிலங்களின் பட்டியல்
இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் ஒற்றை பெண் சிஇஓ-வாக இருக்கும் ராதிகா, பல பாராட்டுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார். நிதி மற்றும் முதலீடு சார்ந்த விஷயங்களில் புகழ்பெற்ற நிபுணராக இருக்கும் ராதிகா குப்தாவின் தாயார் பாகிஸ்தான் நாட்டில் இந்திய தூதராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் உள்ள பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த ராதிகா, McKinsey நிறுவனத்தில் சேர்த்து பணியாற்றினார். அதன்பிறகு 2017ம் ஆண்டு இளம் சிஇஓ-க்களில் ஒருவராக Edelweiss நிறுவனத்தில் சேர்ந்தார். ரூ.80,000 கோடியாக இருந்த Edelweiss நிறுவனத்தின் அஸெட் அண்டர் மேனேஜ்மெண்டை (AUM) ரூ.1,01,406 கோடியாக உயர்த்தியதில் ராதிகாவுக்கு முக்கிய பங்கிருக்கிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
