விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்குப் படைக்கப்பட்ட லட்டுவை ரூ.1.88 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளார் தெலங்கானாவைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர்.
ஒவ்வொரு விநாயகர் சதுர்த்திக்கும் கிலோ கணக்கில் மெகா லட்டு தயாரித்து, விநாயகருக்குப் படைக்கப்படுவதும், சதுர்த்தி விழா நிறைவடைந்ததும் அந்த லட்டுவை ஏலம் விடுவதும் வழக்கம். விநாயகருக்குப் படைத்த லட்டுவை ஏலம் எடுப்பதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
அந்தவகையில், இந்தாண்டு தெலங்கானாவின் நிர்மல் நகரில் நடைபெற்ற விநாயகர் லட்டு ஏலத்தில் அம்ரீன் என்ற முஸ்லிம் பெண் ரூ.1,88,888 தொகைக்கு லட்டு ஏலம் எடுத்துள்ளார். அவரது பங்கேற்பும், வெற்றியும் மக்களிடையே ஆர்வத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

