குறிப்பிட்ட டியூ தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ தாக்கல் செய்யப்பட்ட ரிட்டன்களுக்கான வரிப் பணத்தை அந்த மதிப்பீட்டு ஆண்டின் ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து ரீஃபண்ட் ப்ராசஸ் செய்யப்படும் நாள் வரை கணக்கிட்டு அதற்கான வட்டியை வருமான வரித்துறை வழங்கும். ஒரு வேலை டியூ தேதிக்குப் பிறகு ஒரு ரிட்டன் தாக்கல் செய்யப்பட்டிருந்தால், ITR தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து வட்டி கணக்கிடப்படும்.
டியூ தேதி நீட்டிப்பு வரி செலுத்துவோருக்கு எந்த வகையில் நன்மை அளிக்கிறது:
தற்போது ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கான புதிய டியூ தேதி என்பது செப்டம்பர் 15, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தேதி வரையிலும் அல்லது தேதிக்கு முன்பாகவோ தாக்கல் செய்யப்படும் ரிட்டன்கள் சரியான நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகக் கருதப்படும்.
அதாவது, இதன் மூலமாக வரி செலுத்துவோருக்கு ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து வட்டியானது கணக்கிடப்படும். எனினும், செப்டம்பர் 15ஆம் தேதி வரை ITR தாக்கல் செய்யும் நபருக்கு ரீஃபண்ட் தொகையானது செப்டம்பர் மாத இறுதியில் ப்ராசஸ் செய்யப்படும். இந்த நீண்ட கால இடைவெளி காரணமாக வருமான வரித்துறையினர் அதிக வட்டியை வழங்க வேண்டி இருக்கும்.
எதற்காக 30 சதவீத அதிக வட்டி வழங்கப்படுகிறது?
ரீஃபண்ட் தொகைக்கான வட்டியானது ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது. தற்போது செப்டம்பர் 15ஆம் தேதி வரை டியூ தேதி நீட்டிக்கப்பட்டிருப்பதால், இந்த கூடுதல் 46 நாட்களுக்கான வட்டி என்பது 31.94%.
கூடுதல் வட்டி பலனுக்கான ஒரு உதாரணம்:
ஒரு வரி செலுத்துவோர் 25,000 ரூபாய் ரீஃபண்ட் பெறுவதற்குத் தகுதி பெறுவதாக வைத்துக் கொள்வோம். ஒருவேளை அவர் ஜூலை 31ஆம் தேதிக்குள் தன்னுடைய ரிட்டனைத் தாக்கல் செய்துவிட்டால், அவருக்கு 500 ரூபாய் வட்டியாகக் கிடைக்கும். ஆனால், அவர் தன்னுடைய ரிட்டனை செப்டம்பர் 15ஆம் தேதியில் தாக்கல் செய்யும் பட்சத்தில், அவருக்கான ரீஃபண்ட் தொகையானது செப்டம்பர் 30ஆம் தேதி வாக்கில் வழங்கப்படும். எனவே, இந்த சூழ்நிலையில் இவருக்கான வட்டியானது 33 சதவீதம் அதிகமாகி, 750 ரூபாயாக அதிகரிக்கும்.
ரீஃபண்ட் வட்டிக்கான வரி:
இங்கு வரி ரீஃபண்டுகளுக்கு நீங்கள் பெறும் வட்டி பணமானது வருமானமாகக் கருதப்படுகிறது மற்றும் ரீஃபண்ட் தொகை பெற்ற வருடத்தில் அதனை ‘பிற மூலங்களில் இருந்து வந்த வருமானம்’ என்பதன் கீழ் குறிப்பிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், 2025-26 நிதியாண்டில் பிரிவு 87A-இன் கீழ் 12 லட்ச ரூபாய் (மாத வருமானமல்லாதவர்கள்) மற்றும் 12.75 லட்சம் (மாத வருமானம் பெறுபவர்கள்) வரி செலுத்தத் தேவையில்லை. இதனால், இந்த பலன் பலருக்கு வரி இல்லாத ஒன்றாக அமைகிறது.

