குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தன்னுடைய வாழ்த்துச் செய்தியில், ”நாட்டு மக்கள் அனைவருக்கும் ராம நவமி வாழ்த்துக்கள். இந்த திருநாள் மதம், நீதி மற்றும் கடமை பற்றிய செய்தியை நமக்கு தெரிவிக்கிறது.
ஸ்ரீராமர் மனிதகுலத்திற்கு தியாகம், அர்ப்பணிப்பு, நல்லிணக்கம் மற்றும் துணிச்சல் ஆகியவற்றின் உயர்ந்த லட்சியங்களை வழங்கியுள்ளார். அவரது நல்லாட்சி, அதாவது ராமராஜ்யம் என்ற கருத்து சிறந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த நாளில், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக உழைப்பதற்கு உறுதிமொழி எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்… நல்லதைச் சொல்வது தப்பா?

