‘ராமா் சேது’வை எந்த வகையிலும் தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ, மாசுபாடு அல்லது அவமதிப்பு ஏற்படுவதிலிருந்து பாதுகாக்க மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது. இந்த தொல்பொருள் தளமான ராமா் சேதுவை ஒரு புனித யாத்திரையாகக் கருதும் மக்களின் நம்பிக்கை மற்றும் ‘அபிமானம்’ சாா்ந்த விஷயமாகும். தொல்பொருள் ஆய்வுகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் வழிபாட்டாளா்களுக்கான புனித யாத்திரையாக இருப்பதற்கு துணைபுரியும் அடிப்படை ஆதாரங்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இதன்படி மீண்டும் கடந்த மே 13 ஆம் தேதி அரசுக்கு மணு அளிக்கப்பட்டது. இதனால், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவின்படி இதில் துரிதமான முடிவை எடுக்க மத்திய கலாசாரத்துறைக்கு உத்தரவிடவேண்டும்’ ’ என இந்த மனுவில் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளாா்.

