Last Updated:
பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மாநிலங்களவை எம்பியாக பதவியேற்றுக் கொண்டார்.
பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மாநிலங்களவை எம்பியாக பதவியேற்றுக் கொண்டார். டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறையில் இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிதிஷ் குமார் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுள்ளதால், வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி அவர் பிகார் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ராஜினாமா செய்வதற்கு முன்பாக, ஏப்ரல் 13-ஆம் தேதி நிதிஷ் குமார் தனது அமைச்சரவையின் கடைசி கூட்டத்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிகாரில் புதிய அரசு மற்றும் புதிய முதலமைச்சர் பதவியேற்பு விழா ஏப்ரல் 14 அல்லது 15-ஆம் தேதிகளில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது துணை முதலமைச்சராக இருக்கும், சாம்ராட் சௌத்ரி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முதலமைச்சர் பதவிக்கான ரேஸில் முன்னிலையில் உள்ளார். ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த இவருக்குக் கட்சிக்குள் பலமான ஆதரவு உள்ளது.
பிஜேபி-யைச் சேர்ந்த மற்றொரு துணை முதலமைச்சரான விஜய் குமார் சின்ஹாவுக்கும் முதலமைச்சர் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான விஜய் குமார் சின்ஹாவுக்கு அதிக ஆதரவு இருப்பதாகவும் கூறப்படுகிறது
மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய், ஜேடியு கட்சியின் மூத்தத் தலைவர் சஞ்சய் குமார் ஜா, டிகா தொகுதி எம்எல்ஏ சஞ்ஜிவ் சவுராஷியா ஆகியோரும் முதலமைச்சர் தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
Apr 10, 2026 10:15 PM IST

