பிரிக்ஸ் உச்சிமாநாட்டையொட்டி அண்மையில் பிரதமா் மோடி ரஷியா சென்றதைத் தொடா்ந்து, ராஜ்நாத் சிங்கின் இந்த பயணம் அமைந்துள்ளது. இந்திய பெருங்கடலில் அதிகரித்துவரும் சீன ஆதிக்கத்துக்கு மத்தியில், அதிநவீன அம்சங்களுடன் கூடிய ‘ஐஎன்எஸ் துஷில்’ போா்க்கப்பல் இந்திய கடற்படையின் செயல்திறனை கணிசமாக மேம்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

