Last Updated:
ராகுல் டிராவிட் 2023 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ராகுல் டிராவிட் விலகியுள்ளார். அவரது அறிவிப்பு ராஜஸ்தான் அணி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில் தான் அந்த அணியில் இருந்து விலக கேப்டன் சஞ்சீவ் சாம்சன் விருப்பம் தெரிவித்திருந்ததாக தகவல்கள் பரவின. இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ராகுல் டிராவிட் இன்று அறிவித்துள்ளார்.
அடுத்ததாக அவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முக்கிய அணியில் பயிற்சியாளர் பொறுப்பில் இடம் பெறுவார் என்று தகவல்கள் தற்போது பரவி வருகிறது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராகுல் டிராவிட்டை நியமிக்க ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பல்வேறு அணிகளில் பணியாற்றிய ராகுல் டிராவிட் 2023 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அவர் பொறுப்பில் இருந்து விலகியதற்கான காரணங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
August 30, 2025 2:19 PM IST


