ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடர்ந்து 4 ஆவது போட்டியிலும் தோல்வி கிடைத்துள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாபிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது ராஜஸ்தான் அணி.
டாஸ்வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னில் ஆட்டமிழக்க கோலர் கேட்மோர் மற்றும் கேப்டன் சாம்சன் தலா 18 ரன்கள் எடுத்தனர். சிறப்பாக விளையாடிய அஷ்வின் 28 ரன்கள் சேர்த்தார்.
துருவ் ஜுரெல் ரன் ஏதும் எடுக்காமலும், ரோமன் பவெல் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் அணியை சரிவிலிருந்து மீட்க போராடிய ரியான் பராக் 34 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணியில் சாம் கரன், ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்கள் விளையாடினர். குறைவான இலக்கை பஞ்சாப் வீரர்கள் பொறுமையாக துரத்திய நிலையில் தொடக்க வீரர்கள் பிரப்சிம்ரன் சிங் 6 ரன்னிலும், ஜானி பேர்ஸ்டோ 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ரிலீ ரூசோ 22 ரன்னில் வெளியேற, ஷஷாங்க் சிங் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்ம் அளித்தார். இதன்பின்னர் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த கேப்டன் சாம் சரன் 63 ரன்னும், ஜிதேஷ் சர்மா 22 ரன்னும், அசுதோஷ் சர்மா 17 ரன்னும் எடுத்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு உதவினர்.
18.5 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட்டை இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது.
பாயின்ட்ஸ் டேபிளில் 2 ஆம் இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணி கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியடைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)