ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை வலுப்படுத்திக் கொள்ளும் என்பதால் சிஎஸ்கே ரசிகர்கள் இந்த போட்டியை மிகவும் எதிர்பார்த்துள்ளனர்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக களம் இறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் அணிக்கு மிகவும் சுமாரான தொடக்கத்தை கொடுத்தனர்.
21 பந்துகளில் ஜெய்ஸ்வால் 24ரன்களும், பட்லர் 25 பந்துகளில் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவர்களில் ஓரளவு அதிரடியாக விளையாடிய ரியான் பராக் மற்றும் துருவ் ஜுரெல் அணியின் ஸ்கோர் உயர உதவினர்.
20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 141 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)