அதில்…
“1. உக்ரைன் போரின் தொடக்கத்திற்கு பிறகு, ரஷ்யாவில் இருந்து எண்ணெயை இறக்குமதி செய்து வருவதால், இந்தியாவை அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் டார்கெட் செய்து வருகிறது.
இந்தப் போருக்கு பிறகு, பாரம்பரியமாக எண்ணெய் ஏற்றுமதி செய்து வருபர்வகள் ஐரோப்பா பக்கம் தங்களது ஏற்றுமதியைத் திருப்பியதால் தான், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெயை இறக்குமதி செய்ய தொடங்கியது.
அந்த நேரத்தில், இந்தியா இப்படியான இறக்குமதி மூலம் உலக எரிசக்தி சந்தையை நிலைப்படுத்துகிறது என்று அமெரிக்கா இந்தியாவை ஊக்கப்படுத்தியது.
2. இந்திய மக்களுக்கு தேவையான மற்றும் அவர்கள் எளிதாக வாங்கக்கூடிய அளவில் இருக்கும் எரிசக்தியை வழங்க வேண்டுமென்பதால் தான் இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது.
தற்போதைய உலக சந்தை நிலைக்கு, இது தான் முடியும்.
ரஷ்யா உடன் வணிகம் செய்கிறோம் என்று எங்களை விமர்சிக்கும் நாடுகளே, ரஷ்யா உடன் வணிகம் செய்து வருகிறது.

