மும்பை வட மேற்கு தொகுதியில் சிவசேனை(ஏக்நாத் அணி) வேட்பாளர் ரவீந்திர வாய்கர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, வாய்கர் 4,52,644 வாக்குகளைப் பெற்றார். அதே சமயம் அவரது நெருங்கிய போட்டியாளரான சிவசேனை(உத்தவ் தாக்கரே அணி) அமோல் கிர்த்திகர் 4,52,596 வாக்குகளைப் பெற்றார். வாக்கு எண்ணிக்கையின் போது இரு வேட்பாளர்களும் போட்டிபோட்டு முன்னிலை வகித்து வந்தனர்.
ஒரு கட்டத்தில் கீர்த்திகர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்த நிலையில் கடைசியில் ரவீந்திர வாய்கர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள ஜோகேஸ்வரி கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வான வைகர், இந்த ஆண்டு தொடக்கத்தில் எதிர்க்கட்சியான சிவசேனை அணையிலிருந்து (உத்தவ் தாக்கரே அணி) முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக்கு மாறினார்.
கடைசி நிமிடத்தில் மக்களவைத் தொகுதியில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

&w=1200&resize=1200,675&ssl=1)