கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, லஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றிற்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில் இம்மாதம் 17 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாரு கருணாநாயக்கவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
தேசிய லாட்டரி சபைக்கு (National Lotteries Board) விசேட திட்டமொன்றின் கீழ் ஊழியர்களை இணைத்துக்கொண்ட போது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே ரவி கருணாநாயக்க அழைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தேசிய லாட்டரி சபையின் முன்னாள் தலைவி ஷியாமிலா பெரேராவும் இதற்கு முன்னர் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

