Last Updated:
சோதனை ஓட்ட முறையில் முன்பதிவு இல்லா பெட்டிகளில் குறைவான பயணிகளை கொண்டு செல்லும் முறையை ரயில்வே நிர்வாகம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில் பயணிகளுக்கு மேலும் சௌகரியமான பயணத்தை வழங்கும் வகையில் முக்கிய சில மாற்றங்களை கொண்டு வருவதற்கு ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாள் ஒன்றுக்கு இந்தியாவில் 13000 அதிகமான ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதன் மூலம் தினந்தோறும் இரண்டரை கோடிக்கும் அதிகமான பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள். உலகின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக இந்திய ரயில்வே நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. ரயில் பயணிகளின் வசதிக்காக சமீபத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சில மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் கொண்டு வந்தது.
அதனைத் தொடர்ந்து இன்னும் சில புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ரயில்வே நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது. முதற்கட்டமாக ரயிலில் குற்ற செயல்கள் ஆங்காங்கே ஏற்பட்டு வரும் நிலையில் அதனை தடுப்பதற்காக சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ரயில் பெட்டிகளில் பொருத்துவதற்கு ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
இதே போன்று அன்று எனப்படும் முன்பதிவு செய்யாத ரயில் பெட்டிகளில் முக்கிய மாற்றத்தை மேற்கொள்ளலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதன்படி சுமார் 75 ஆயிரம் ரயில் பெட்டிகளில் மற்றும் 15 ஆயிரம் ரயில் இன்ஜின்களில் சிசி டிவி கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் ஒவ்வொன்றிலும் மைக்ரோ போன் என்ற அம்சம் இருக்கும். 100 கிலோமீட்டர் வேகத்தில் சென்றாலும் காட்சிகளை பதிவு செய்யும் வகையில் அதி நவீன கேமராக்கள் ரயில் இன்ஜினில் பொருத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று அன் ரிசர்வ் unreserved எனப்படும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்டத்தை குறைப்பதற்கும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் அதிகபட்சம் 150 பேர் மட்டுமே பயணிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
July 20, 2025 3:13 PM IST


