Last Updated:
இந்திய ரயில்வே ஜூலை 1 முதல் ரயில் கட்டணத்தை உயர்த்த உள்ளது.
ரயில்களின் கட்டணத்தை உயர்த்த இந்திய ரயில்வே முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பயனாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் குறைந்த செலவில் அதிக தூரம் பயணம் மேற்கொள்ள இருக்கும் பொதுப் போக்குவரத்து என்பது ரயில்வே. அதுமட்டுமின்றி, படுக்கை வசதி, ஏசி வசதி என பயணிகள் தங்கள் பயணத்தை மிகவும் வசதியாக மேற்கொள்ள உதவுவதும் ரயில் பயணம் தான்.
சமீபத்தில் இந்திய ரயில்வேயில் தட்கல் டிக்கெட் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்காமல், ஏஜெண்ட்கள் உள்ளே நுழைந்து டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்கும் சூழல் இருந்தது. இதனை தடுக்க, இந்திய அரசு, ஐஆர்சிடிசியில் போலியான கணக்குகளை கண்டறிந்து, அதனை முடக்கியது. மேலும், ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கியுள்ளது.
இந்நிலையில், தற்போது ரயில் கட்டணம் உயர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஏசி அல்லாத ரயில்களுக்கும், விரைவு ரயில்களுக்கும் கிலோமீட்டருக்கு ஒரு பைசாவும், ஏசி வசதி கொண்ட விரைவு ரயில்களுக்கு கிலோமீட்டருக்கு இரண்டு பைசாவும் உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தக் கட்டண உயர்வு வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் சொல்லப்படுகிறது.
June 24, 2025 2:56 PM IST


