பெரும்பாலானவர்களுக்கு ரயிலில் பயணம் செய்வது மிகவும் வசதியாக இருக்கும். ஆனால், ரயில்களில் கொண்டு செல்லும் லக்கேஜ் தொடர்பான விதிகள் குறித்துப் பலருக்கும் குழப்பம் உள்ளது. இந்திய ரயில்வே, ஒவ்வொரு பயணியும் தங்களது வகுப்பைப் பொறுத்து, சிறிதளவு லக்கேஜ் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கிறது. ஆனால் இதற்கு அதிகபட்ச வரம்பு உள்ளது. இந்திய ரயில்வே விதிகளின்படி, ஏசி முதல் வகுப்புப் பயணிகள் 70 கிலோ வரை இலவசமாக எடுத்துச் செல்லலாம். கூடுதலாக 15 கிலோ சிறிய அளவுக்கு அனுமதி உள்ளது. அதாவது, 15 கிலோ வரையிலான கூடுதல் லக்கேஜ்கள் அனுமதிக்கப்படுகின்றன. அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட எடை 150 கிலோ ஆகும். அதைவிட அதிகமாக இருந்தால், லக்கேஜ்களைத் தனியாக முன்பதிவு செய்து, பிரேக் வேனில் அனுப்ப வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சாமான்கள் உங்களிடம் இருந்தால், அதை முன்கூட்டியே அறிவித்து, அதற்கான கட்டணத்தைச் செலுத்தி, லக்கேஜ்களை எடுத்துச் செல்ல வேண்டும். இந்தக் கட்டணங்கள் உங்கள் சாமான்களின் எடை மற்றும் நீங்கள் பயணிக்கும் தூரத்தைப் பொறுத்து அமையும்.


