Last Updated:
கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் புகழ் பெற்ற குந்தாரப்பள்ளி ஆட்டு சந்தையில் ரம்ஜான் பண்டிகையை 5 கோடி அளவிலான வர்த்தகம் பாதிப்பு. 5000 க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்ய முடியமால் வீடு திரும்பி விவசாயிகள்.
புகழ் பெற்ற குந்தாரப்பள்ளி ஆட்டு சந்தையில் ரம்ஜான் பண்டிகையை 5 கோடி அளவிலான வர்த்தகம் பாதிப்பு. 5000 க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்ய முடியமால் வீடு திரும்பி விவசாயிகள் கிருஷ்ணகிரி அடுத்த புகழ் பெற்ற குந்தாரப்பள்ளி ஆட்டு சந்தை இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆட்டு சந்தை நடந்தது.
விற்பனைக்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் 7500க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு குவிந்தன. இந்த ஆட்டு சந்தைக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்தும் 1000 கணக்கான வியாபாரிகள் குவிந்து ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை தேர்தல் நேரம் ஆடுகள் வியபாரிகள் பெருமளவில் யாரும் ஆர்வம் காட்டவில்லை.
குறிப்பாக சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணமாலை, ஆந்திரா மற்றும் கர்நாடக மாவட்டங்களில் இருந்து 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை ஆடுகள் வாங்க கூடிய பெரிய அளவிலான வியபாரிகள் தேர்தல் என்பதால் உரிய ஆணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டால் அதிகாரிகள் பறிமுதல் செய்து விடுவார்கள் என கருதி வியபாரிகள் யாரும் சந்தைக்கு வரததால் ஆடுகள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆடுகள் விற்பனை இல்லமால் 5000த்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யபடமால் ஆடுகள் கூட்டம் கூட்டமாக தேக்கம் அடைந்தன.
இதனால் ஆண்டுதோறும் 5 கோடி முதல் 10 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு 2 கோடி வரை கூட விற்பனை இல்லாமல் சந்தை வேறிசோடி காணப்பட்டது. இதனால் இம்முறை சுமார் 5 கோடி ரூபாய் அளவிலான ஆடுகள் விற்பனை செய்யமால் தேக்கம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அதிகாலை முதலே ஆடுகளை விற்பனைக்கு வைத்து விவசாயிகள் ஆடுகள் விற்பனை இல்லமால் சோகத்துடன் வீடு திரும்பினர். இதனால் சந்தை வழக்கத்தை காட்டிலும் வெறிசோடி காணப்பட்டது.
செய்தியாளர் : தினேஷ்குமார்
Mar 20, 2026 10:59 PM IST
ரம்ஜான் சந்தையில் ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு! – தேர்தல் கெடுபிடிகளால் வெறிச்சோடிய ஆட்டு சந்தை.

