முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலகிய பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட இ-விசா வழங்கும் திட்டம் தொடர்பானதாகக் கூறப்படும் நிதி முறைகேடு குறித்து, தற்போதைய அமைச்சரவைக்கும் அறிக்கை அனுப்புமாறு இலங்கை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், ரவூப் ஹக்கீம் மற்றும் பாட்டளி சம்பிக்க ரணவக்க ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட இ-விசா ஒப்பந்தத்திற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது.
அமைச்சரவை மனு
அந்த அமைச்சரவை மனுவில் பதிலளிப்பாளர்களாக பெயரிடப்பட்டுள்ளதால், தற்போதைய அமைச்சரவைக்கும் இந்த வழக்கில் பதிலளிக்கும் பொறுப்பு பொருந்தும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பதிலளிப்பாளர்கள் சார்பில் முன்னிறையான மேலதிக சட்டமா அதிபர் விவேகா சிறிவர்தன, இ-விசா ஒப்பந்தத்தின் சட்டபூர்வத்தன்மையை ஆராய அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அறிவித்தார்.
இந்த வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

