Last Updated:
மும்பை அணியின் நட்சத்திர வீரர் பிருத்வி ஷா உள்ளிட்ட பல வீரர்கள் முகக்கவசம் அணிந்தபடி ஃபீல்டிங் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
மும்பை மற்றும் மகாராஷ்டிரா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டியின் போது, மும்பை வீரர்கள் மைதானத்தில் முகக்கவசம் அணிந்து விளையாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் தற்போது காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. குறிப்பாக, போட்டி நடைபெற்ற மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு (AQI) மிக அபாயகரமான அளவைத் தொட்டது. இதனால் வீரர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.
தொடர்ந்து மைதானத்தில் ஓடி விளையாடும்போது, மாசடைந்த காற்றைச் சுவாசிப்பது வீரர்களின் நுரையீரலைப் பாதிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் முகக்கவசம் அணிந்தனர். மும்பை அணியின் நட்சத்திர வீரர் பிருத்வி ஷா உள்ளிட்ட பல வீரர்கள் முகக்கவசம் அணிந்தபடி ஃபீல்டிங் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
மும்பை நகரின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் இதர கட்டுமானப் பணிகளால் காற்றில் தூசிக் துகள்கள் அதிகரித்துள்ளதே இந்தத் திடீர் மாசிற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
Jan 29, 2026 10:31 PM IST


