சிங்கப்பூர்: ரங்கூன் சாலை உள்ளிட்ட இடங்களில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக பிடிபட்ட 17 வாகன ஓட்டுநர்கள் மீது நாளை ஆகஸ்ட் 28 ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதில் இருவர் மீது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி, சாலைகளில் மற்றவர்களுக்கு இடையூறு விளைவித்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
“சம்பளம் முறையா வரல” – கட்டுமானத் துறை வெளிநாட்டு ஊழியர்களிடம் அதிகரித்த புகார்
27 முதல் 48 வயதுக்குட்பட்ட அவர்கள், ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது மூச்சுப் பரிசோதனை மூலமாக பிடிபட்டனர்.
இதில் 30 மற்றும் 35 வயதுடைய இருவர், ரங்கூன் சாலை மற்றும் தெம்பனீஸ் அவென்யூ 5 இல் வாகனங்களை சாலையில் விட்டு சென்று மற்ற சாலைப் பயனர்களுக்கு இடையூறையும் ஆபத்தையும் ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், வாகன ஓட்டிகளுக்கு S$2,000 முதல் S$10,000 வரை அபராதம், 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மீண்டும் மீண்டும் அதே தவறை செய்யும் குற்றவாளிகளுக்கு S$5,000 முதல் S$20,000 வரை அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
மேலும் அவர்கள் அனைத்து வகை வாகனங்களை ஓட்டுவதற்கு தடையும் விதிக்கப்படலாம்.
கல்லாங்கில் லாரி ஓட்டுநர் மரணம்… தப்பியோடிய கார் ஓட்டுநர் கைது

