டி-20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில் தொடருக்கான கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்படுகிறது.
இந்தநிலையில், 7.30 இற்குத் தம்புள்ளையில் இருந்து எடுத்து வரப்படும் உலகக்கிண்ணமானது 8.30 இற்கு மிஹிந்தலை நகரத்தில் வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு 10.30 மணிக்கு வவுனியா நகரத்துக்கு எடுத்துவரப்படவுள்ளது.
இதையடுத்து, அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு 12.00 மணிக்குக் கிளிநொச்சியில் வைக்கப்படவுள்ளது.
பல்வேறு நகரங்கள்
இதன்பின்பு, அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு 3.30 இற்கு யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அண்மையிலும் 4.25 இற்கு நல்லூர் கந்தன் ஆலயத்திலும் 6.20 இற்குத் துரையப்பா விளையாட்டு அரங்கிலும் 6.40 இற்கு யாழ்ப்பாணம் கோட்டையிலும் 7.10 இற்கு யாழ்ப்பாணம் நூலகத்திலும் வைக்கப்படவுள்ளது.
டி-20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இந்த முறை இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன.

இதனடிப்படையில், எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஏழாம் திகதி நெதர்லாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கொழும்பில் நடைபெறும் ஆட்டத்துடன் உலகக்கிண்ணத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இலங்கையில் கடந்த (21.01.2026) அன்று உலகக்கிண்ணம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், உலகக்கிண்ணமானது இலங்கையின் பல்வேறு நகரங்களில் காட்சிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாணத்துக்கும் எடுத்துவரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!
|

