• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் தேவை: பிரதமர் மோடியிடம் சனத் ஜெயசூர்யா கோரிக்கை | Jaffna needs international cricket stadium Sanath Jayasuriya requests pm Modi

GenevaTimes by GenevaTimes
April 14, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் தேவை: பிரதமர் மோடியிடம் சனத் ஜெயசூர்யா கோரிக்கை | Jaffna needs international cricket stadium Sanath Jayasuriya requests pm Modi
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க இந்தியா உதவ வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வாரம் பிரதமர் மோடி, இலங்கைக்கு சென்றிருந்தார். அப்போது பிரதமர் மோடியை, 1996-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பிடித்திருந்த இலங்கை வீரர்கள் சந்தித்துப் பேசினர்.

அப்போது அவர்களைப் பாராட்டிப் பேசிய பிரதமர் மோடி, இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்திலும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். பிரதமர் மோடியைச் சந்தித்தபோது, யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்தியா உதவ வேண்டும் என்று இலங்கை முன்னாள் கேப்டனும், இலங்கை அணியின் பயிற்சியாளருமான சனத் ஜெயசூர்யா கோரிக்கை விடுத்திருந்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் சனத் ஜெயசூர்யா கூறியதாவது: பொருளாதார பிரச்சினையில் சிக்கி இருக்கும் இலங்கைக்கு ஏராளமான உதவிகளை இந்தியா செய்துள்ளது. அதற்காக எனது நன்றி.

யாழ்ப்பாணத்திலிருந்து ஏராளமான திறமையான கிரிக்கெட் வீரர்கள் வருகின்றனர். ஆனால் அங்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் இல்லை. நாங்கள் அங்கு மாகாண அளவிலும், மாவட்ட அளவிலும் பயிற்சியாளர்களை நியமித்து திறமையான வீரர்களை கண்டறிந்து வருகிறோம்.

அவர்களுக்கு உதவும் பொருட்டு யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்தியா உதவவேண்டும். இதற்காக பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தேன். இதுதொடர்பாக அவர் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Read More

Previous Post

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான முா்ஷிதாபாத் வன்முறை: மேலும் 12 போ் கைது

Next Post

40% மின்சார கட்டண அதிகரிப்பு – தீட்டப்படும் சதி – அம்பலமான பின்னணி

Next Post
40% மின்சார கட்டண அதிகரிப்பு – தீட்டப்படும் சதி – அம்பலமான பின்னணி

40% மின்சார கட்டண அதிகரிப்பு - தீட்டப்படும் சதி - அம்பலமான பின்னணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin