புதிய இணைப்பு
கொழும்பில் (Colombo) இருந்து சூட்சுமமான முறையில் போதை மாத்திரைகளை கடத்தி வந்து விற்பனை
செய்தவர் உள்ளிட்ட மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாசி கருவாடு சம்பல் போத்தலுக்குள் மறைத்து போதை மாத்திரைகளை கடத்தி வந்து
விற்பனையில் ஈடுபட்டவரே யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையினரால்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து மேலும் இருவர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கைது
போதை மாத்திரை கடத்தல் மற்றும் விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக கைதான மூன்று
பேரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இரண்டு கிராம் மற்றும் மூன்று கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு
சந்தேக நபர்களும் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான ஜந்து பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான்
நீதிமன்றத்தில் முற்படுத்தகாவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செய்தி – பிரதீபன்
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) – குருநகர் பகுதியில் 42 போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (22.11.2025) யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 22,24 வயதுடைய நபர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
யாழ்ப்பாணம் காவல் பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அவர்களின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றுவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
|
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

