யாழ்ப்பாணத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த
சிறுவனின் உடற்கூற்று ஆய்வில் தோட்டா நெற்றியில் பட்டு , தலைக்குள்
ஊடுவி மூளையை துளைத்து சென்றமையால் மரணம் சம்பவத்துள்ளது என தெரிய வந்துள்ளது.
அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையின் கட்டளையை மீறி பயணித்த வாகனத்தின் மீது
மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் , வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த
அல்பினோ அருள் பயாஸ் என்ற 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளான்.
சிறுவனது உடற்கூற்று பரிசோதனை
சிறுவனது உடற்கூற்று பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் சட்ட
வைத்திய அதிகாரி எம். மயூரதன் முன்னிலையில் நடைபெற்றது.

அதன் போது துப்பாக்கி சன்னம் சிறுவனின் நெற்றியில் பட்டு ஊடுருவி
மூளையை தாக்கியமையால் மரணம் சம்பவித்துள்ளது என உடற்கூற்று அறிக்கையில்
அறிக்கையிடப்பட்டுள்ளது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

