தந்தை செல்வாவின் 126 ஆவது பிறந்ததினம் இன்று காலை (31) யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.
தந்தை செல்வா அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில் யாழிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில்இந்த நிகழ்வு நடைபெற்றது.
நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி
இதன்போது தந்தை செல்வாவின் நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் உள்ளிட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்… |