யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, புத்தளம் – கொழும்பு பிரதான வீதி பல இடங்களில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மாதம்பே பகுதி முழுவதும் மழைநீரால் மூழ்கியுள்ளதால் அவ்வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
வெள்ள நீர்மட்டம்
குதிரைக்கோவில் பகுதியில் வெள்ள நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இதனால் ஆபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டுச் சாத்தியமான மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் அவசரப் பயணங்களின் போது விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |



