தங்களுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தினால் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க – இஸ்ரேல் தரப்பினருக்கு அதுவே நரகம் ஆகிவிடும் என ஈரான் தரப்பு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட 48 மணிநேர காலக்கெடுவுக்கு மத்தியில் ஈரான் குறித்த விடயத்தை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து இன்று( 05..04.2026) ஈரானிய இராணுவத்தின் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில்,
ஆக்கிரமிப்பு விரிவடைந்தால்
“ஆக்கிரமிப்பு விரிவடைந்தால், இந்தப் பிராந்தியம் முழுவதும் உங்களுக்கு நரகமாக மாறிவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஈரானிய இஸ்லாமியக் குடியரசைத் தோற்கடித்தோம் என்ற மாயை, நீங்கள் மூழ்கிப்போகும் ஒரு சதுப்பு நிலமாக மாறியுள்ளது” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

