ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனுடன் இந்திய பிரதமர் நரந்திர மோடி தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார்.
இதன்போது, மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதல் குறித்து அவர் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த உரையாடலில், பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வருவது மற்றும் பொதுமக்கள் உயிரிழப்புகள் ஏற்படுவது குறித்து “ஆழ்ந்த கவலை” இருப்பதாக மோடி தெரிவித்ததாக அவர் தனது எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளார்.
இந்திய குடிமக்களின் பாதுகாப்பு
மேலும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க இந்தியா உறுதியாக இருப்பதை அவர் மீண்டும் வலியுறுத்தியதுடன், பிரச்சினைகளைத் தீர்க்க உரையாடல் மற்றும் தூதரக வழிமுறைகள் முக்கியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Had a conversation with Iranian President, Dr. Masoud Pezeshkian, to discuss the serious situation in the region.
Expressed deep concern over the escalation of tensions and the loss of civilian lives as well as damage to civilian infrastructure.
The safety and security of…
— Narendra Modi (@narendramodi) March 12, 2026
அதே நேரத்தில், வெளிநாடுகளில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு தான் தனது முக்கிய முன்னுரிமை எனவும், பொருட்கள் மற்றும் ஆற்றல் வளங்கள் தடையின்றி பேணப்படுவது அவசியம் எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

