பிரதமர் நரேந்திர மோடியுடன் இத்தாலி பிரதமர் எடுத்துக் கொண்ட செல்பி கவனம் பெற்றுள்ளது.
இத்தாலி பயணத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் எடுத்த செல்ஃபி வீடியோவை அந்நாட்டு அதிபர் மெலோனி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
மூன்றாவது முறையாக பிரதமாக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, ஜி7 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றார். மாநாட்டின் இடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களை மோடி சந்தித்தார். இத்தாலி பிரதமர் மெலோனி, இந்திய பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்தார்.
அந்த வீடியோவை, #Melodi (மெலோடி) என்ற ஹேஸ்டேக்கில் மெலோனி பதிவிட்டுள்ளார். அதாவது இத்தாலி பிரதமரின் முதல் 3 எழுத்துகள் மெலோவையும், இந்திய பிரதமர் மோடியின் கடைசி 2 எழுத்துக்களையும் சேர்த்து, மெலோடி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Hi friends, from #Melodi pic.twitter.com/OslCnWlB86
— Giorgia Meloni (@GiorgiaMeloni) June 15, 2024
இத்தாலி பிரதமர் மெலோனியும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த ஜி20 மாநாடு மற்றும் துபாயில் நடந்த பருவநிலை மாற்ற மாநாட்டிலும் எடுத்துக்கொண்ட செல்ஃபி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டன.
இதனிடையே, இத்தாலி பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி 7 என்ற அமைப்பு செயல்படுகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநாட்டில், பிற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாநாட்டை இத்தாலி தலைமை தாங்கி நடத்தியது.
.
&w=750&resize=750,375&ssl=1)
