
மோசமான வானிலை காரணமாக நாட்டின் 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்தத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல்வேறு விபத்துக்களால் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, மோசமான காலநிலை காரணமாக நேற்றிரவு மூடப்பட்ட கண்டி – மஹியங்கனை வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்சரிவு மற்றும் பாறைகள் விழும் அபாயம் காரணமாக கண்டி – மஹியங்கனை பிரதான வீதியை கண்டி, தன்னேகும்புர சந்தி மற்றும் ஹசலக்க, பலம சந்தி ஆகிய இடங்களில் நேற்று மாலை 6 மணி முதல் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மலபட்டாவ பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வலப்பனையிலிருந்து ஹகுரன்கெத்த ஊடாக கண்டி வரையான வீதி மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21
WHATSAPP இல் இணையுங்கள்.
JOIN NOW GROUP 01
அல்லது
JOIN NOW GROUP 02

