Last Updated:
இஸ்ரோ தனது 101வது ராக்கெட்டை மே 18ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவ உள்ளது. பாதுகாப்பு காரணமாக பழவேற்காடு ஏரி மற்றும் பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ தனது 101வது ராக்கெட்டை விண்ணில் ஏவ தயாராகிவரும் சூழலில், பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் வானிலை கண்காணிப்பிற்கான செயற்கைகோள் பொறுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி 61 ராக்கெட்டை வரும் மே 18ம் தேதி காலை 6.59 மணிக்கு இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. 101வது ராக்கெட் ஏவுதளத்திற்கான கடைசிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்த பணியின் டைம்லேப்ஸ் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இதனிடையே சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 101வது ராக்கெட் இஸ்ரோவுக்கு முக்கியமான ஒன்று என்றார்.
இந்நிலையில், ராக்கெட் ஏவும் நாளில் ஸ்ரீஹரிகோட்டாவை ஒட்டிய வங்க கடல் பகுதியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பழவேற்காடு ஏரி மற்றும் பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன் வளத்துறை இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
மே 18-ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி 61 ராக்கெட்… பழவேற்காடு மீனவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!


