Last Updated:
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் எனர்ஜி என்னை ஆச்சரியப்படுத்துகிறது. அவர் தான் 64 ஆயிரம் ஸ்டெப் நடப்பதாக கூறினார். நான் ஒரு வாரத்திற்கா? என்று கேட்டபோது அவர் ஒரு நாளைக்கு என்று பதில் அளித்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ரிலையன்ஸ் சில்லறை விற்பனை கடைகளின் எண்ணிக்கை அடுத்த 3 ஆண்டுகளில் 1700 ஆக அதிகரிக்கப்படும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிமெட் சேர்மன் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பங்கேற்று ரிலையன்ஸ் சேர்மன் முகேஷ் அம்பானி பேசியதாவது-
தற்போது மேற்கு வங்கத்தில் ரிலையன்ஸ் சில்லறை விற்பனை கடைகளின் எண்ணிக்கை 1300 ஆக உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த கடைகளின் பரப்பளவு 80 லட்சம் சதுர அடிகள் ஆகும். மேற்கு வங்கத்தில் 400-க்கும் அதிகமான நகரங்களில் ரிலையன்ஸ் சில்லறை கடைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த எண்ணிக்கை அடுத்த 3 ஆண்டுகளில் 1700 ஆக உயர்த்தப்படும். டெலிவரி செய்யும் வர்ததகமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 2030-க்குள் மேற்கு வங்கத்தில் ரிலையன்ஸ் ரூ. 50 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு செய்யும் . இதனால் மாநிலத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
மேற்கு வங்கத்தில் முதலீடு செய்வதற்கான ஏற்ற அனைத்து அமைப்புகளும் உள்ளன. அங்கு முதலீடு செய்வதற்கு இதுதான் சிறந்த நேரம் என்று கருதுகிறேன்.
மேற்கு வங்கம் ஆன்மிகம், கலாசாரம், இலக்கியம், கலைகள், தேசபக்தி என பல்வேறு அம்சங்களுக்கு புகழ்பெற்று உள்ளது. 2016 ஆம் ஆண்டிலிருந்து இங்கு நடைபெறும் வர்த்தக உச்சி மாநாட்டில் நான் பங்கேற்று வருகிறேன். ஒவ்வொரு முறையும் இந்த மாநாடு வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்றைக்கு 20 நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள் நம்முடன் இணைந்துள்ளனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் எனர்ஜி என்னை ஆச்சரியப்படுத்துகிறது. அவர் தான் 64 ஆயிரம் ஸ்டெப் நடப்பதாக கூறினார். நான் ஒரு வாரத்திற்கா? என்று கேட்டபோது அவர் ஒரு நாளைக்கு என்று பதில் அளித்தார். என்று பேசினார்.
February 05, 2025 8:09 PM IST
‘மேற்கு வங்கத்தில் சில்லறை விற்பனை கடைகள் எண்ணிக்கை 1700 ஆக உயர்த்தப்படும்’ – சேர்மன் முகேஷ் அம்பானி அறிவிப்பு


