Last Updated:
மேற்குவங்கத்தில் ஏப்ரல் 29ல் நடந்த இரண்டாம் கட்டத் தேர்தலில் முறைகேடு குற்றச்சாட்டுகள் காரணமாக, 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் நாளை (மே 2) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேற்குவங்கம் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாக முறையே ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், கடந்த 29ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்டத் தேர்தல் நடந்த வாக்குச்சாவடிகளில் 15 வாக்குச்சாவடிகளில் மட்டும் மறுவாக்குப் பதிவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் மொத்தம் 77 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டன. அதனை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் 15 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மக்ரஹத் பச்சிம் சட்டமன்றத் தொகுதியின் 11 வாக்குச்சாவடிகளிலும், டைமண்ட் ஹார்பர் சட்டமன்றத் தொகுதியின் 4 வாக்குச்சாவடிகளிலும் நாளை, மே 2-ஆம் தேதி, மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.


