• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மேம்பாலத்தின் மீது புகைப்படம் எடுக்க முயன்றபோது நடந்த விபரீதம்… சுற்றுலா சென்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நபர்…

GenevaTimes by GenevaTimes
July 11, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மேம்பாலத்தின் மீது புகைப்படம் எடுக்க முயன்றபோது நடந்த விபரீதம்… சுற்றுலா சென்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நபர்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 11, 2025 4:58 PM IST

மைசூரைச் சேர்ந்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரான மகேஷ் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சர்வ தர்ம ஆசிரம பகுதிக்கு அருகிலுள்ள கிருஷ்ணராஜ சாகர் பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிக்னிக் சென்றுள்ளார்.

News18News18
News18

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் மீது நின்று புகைப்படம் எடுக்க முயற்சித்த நபர் ஒருவர் தவறி விழுந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிடைத்துள்ள தகவலின்படி 36 வயது நிரம்பிய மகேஷ் என்ற நபர், இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மைசூரைச் சேர்ந்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரான மகேஷ் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சர்வ தர்ம ஆசிரம பகுதிக்கு அருகிலுள்ள கிருஷ்ணராஜ சாகர் பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிக்னிக் சென்றுள்ளார்.

நண்பர்களுடன் சேர்ந்து குதூகலமாக அரட்டையடித்துக் கொண்டிருந்த மகேஷ், அதே மனநிலையில் காவிரி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் மீது ஏறி நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள முயற்சி செய்துள்ளார். புகைப்படம் எடுக்க முயன்று கொண்டிருக்கும்போதே நிலைதடுமாறி பாலத்தில் இருந்து தவறி ஆற்றில் விழுந்துள்ளார்.

ஆற்றுத் தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததாலும், நீரோட்டத்தின் வேகம் அதிகமாக இருந்ததாலும் விழுந்ததுமே ஆற்றின் நீரோட்டத்தில் அவர் மிகவும் விரைவாக அடித்துச் செல்லப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தேடுதல் வேட்டையை துவங்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புகைப்படம் எடுக்க வந்த ஒருவர், ஆற்றில் தவறி விழுந்து உயிரை விடுவது இது முதல்முறை அல்ல.  சமூக ஊடகங்களில் லைக்குகளைப் பெறுவதற்காக ஆர்வ மிகுதியில் பலரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சுற்றுலாவுக்கு வரும் மக்கள் இதுபோன்ற உயிருக்கு ஆபத்தான தேவையற்ற சாகசங்களில் ஈடுபட வேண்டாம் என காவலர்கள் பலமுறை அறிவுறுத்தியும், மக்கள் யாரும் இதனைப் பொருட்படுத்துவதாக இல்லை.

காவல்துறையினரின் அறிக்கையின்படி, பிற்பகல் 2.30 மணிக்கு இந்த கோர விபத்து நடைபெற்றுள்ளது. கோப்பா காவல் நிலையக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உள்ள விஸ்வேஸ்வரய்யா கால்வாய் மேம்பாலத்தில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. மேம்பாலத்தை கடக்கும் முயற்சியில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாலைத் தடுப்புகளில் மோதி, பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு, நேராக கால்வாயில் விழுந்துள்ளனர். கால்வாயில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 11, 2025 4:54 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

மேம்பாலத்தின் மீது புகைப்படம் எடுக்க முயன்றபோது நடந்த விபரீதம்… சுற்றுலா சென்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நபர்…

Read More

Previous Post

யோஷித மற்றும் டெய்ஸி ஆச்சிக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

Next Post

நாங்களும் 50 சதவீதம் வரி விதிப்போம் – அமெரிக்காவிற்கு பிரேசில் பதிலடி | Makkal Osai

Next Post
நாங்களும் 50 சதவீதம் வரி விதிப்போம் – அமெரிக்காவிற்கு பிரேசில் பதிலடி | Makkal Osai

நாங்களும் 50 சதவீதம் வரி விதிப்போம் - அமெரிக்காவிற்கு பிரேசில் பதிலடி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin