அவர்களும் மின் தட்டுப்பாடு காரணமாக பயிர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, தினமும் 20 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசு 2026-ஆம் ஆண்டுக்கான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது.அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேட்டூர் அணை திறக்கப்படாத சூழ்நிலையில் காவிரி டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை, கார் மற்றும் சொர்ணவாரிப் பருவ நெல் சாகுபடியை ஊக்குவித்து, நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

