அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மெக்சிகோ தக்காளிகள் மீது 17 சதவிகித வரியை விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், அமெரிக்கா ஏப்ரல் மாதம் அறிவித்த வரி விதிப்பு அமலுக்கு வருகிறது என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா உடன் புதிதாக வர்த்தகம் போடும் நாடுகளுக்கு, வரி குறைக்கப்பட உள்ளது. இதற்காக, பல நாடுகளும் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆனால், இது தொடர்பாக, மெக்சிகோ நடத்திய பேச்சுவார்த்தை கைக்கூடவில்லை.
இந்த நிலையில், ட்ரம்ப் மெக்சிகோ தக்காளிகள் மீது 17 சதவிகித வரி விதித்துள்ளார். இது அமெரிக்கா விவசாயிகளுக்காக எடுக்கப்பட்ட முடிவு என்று அமெரிக்காவின் வணிகத் துறை கூறுகிறது.

