Last Updated:
துப்பாக்கியால் சுட்ட ஜுலியோ சீஸர் ஜஸ்ஸோ என்னும் உள்ளூர்க்காரரை மெக்சிகோ காவல் துறையினர் கைது செய்தனர்.
மெக்சிகோ நாட்டின் முக்கிய சுற்றுலா தலத்தில் நபர் ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டுவிட்டுத் தப்பி ஓடிய காட்சி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
வரும் ஜூன் மாதம் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளை அமெரிக்கா, கனடாவுடன் இணைந்து மெக்சிகோ நடத்தவுள்ளது. அதனை முன்னிட்டு, அந்நாட்டின் சுற்றுலா தலங்களுக்கு பல்வேறு நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், மெக்சிகோவில் டியோடிஹுவாகான் நகரில் பழங்கால பிரமிடுகள் அமைந்துள்ள சுற்றுலா தலத்தில் ஏராளமான வெளிநாட்டினர் குவிந்திருந்தனர்.
An armed man standing atop one of the historic Teotihuacán pyramids near Mexico City opened fire on tourists on Monday, killing one Canadian woman and leaving at least 13 other people injured at the archaeological site, authorities said. pic.twitter.com/rBaPSWt3nL
— NTD News (@NTDNews) April 21, 2026
அப்போது அங்கு வந்த ஒருவர், சுற்றுலாப் பயணிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் சிதறி ஓடினர். சிலர் தரையில் படுத்துக் கொண்டு உயிர் தப்பினர். இந்தத் தாக்குதலில் கனடாவைச் சேர்ந்த பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


