கோலாலம்பூர்:
மெக்சிகோவின் பல மாநிலங்களில் உள்ளூர் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள கலவரங்களில், மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை வெளியுறவு அமைச்சகம் (விஸ்மா புத்ரா) திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
மெக்சிகோ சிட்டியில் உள்ள மலேசிய தூதரகத்தின் மூலம் ஜாலிஸ்கோ (Jalisco), கோலிமா (Colima), மிச்சோக்கன் (Michoacan), நாயரித் (Nayarit), குவானாஜுவாடோ (Guanajuato) மற்றும் தமுலிபாஸ் (Tamaulipas) உள்ளிட்ட மாநிலங்களில் நிலவும் வன்முறைச் சம்பவங்களை அமைச்சகம் கூர்ந்து கவனித்து வருகிறது.
“சமீபத்திய அறிக்கைகளின்படி, இந்த கலவரத்தினால் மலேசிய குடிமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை அமைச்சகம் உறுதிப்படுத்துகிறது,” என விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.
மெக்சிகோவில் வசிக்கும் அல்லது அங்கு பயணம் மேற்கொள்ளும் மலேசியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பொதுக் கூட்டங்களைத் தவிர்க்குமாறும், உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு வழிமுறைகளைத் துல்லியமாகப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவசர காலங்களில் தொடர்புகொள்வதற்கும் உதவிகளைப் பெறுவதற்கும், மலேசியர்கள் தங்களது விபரங்களை E-Konsular இணையதளத்தில் (https://ekonsular.kln.gov.my) பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஏதேனும் உதவி தேவைப்படும் மலேசியர்கள் மெக்சிகோவில் உள்ள மலேசிய தூதரகத்தை பின்வரும் எண்கள் அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
அல்லது தொலைபேசி: +52 55 5282 4656 / +52 55 5282 5166 அல்லது மின்னஞ்சல்: [email protected] / [email protected].ம்ய் தொடர்பு கொள்ளலாம்.
நிலைமையை விஸ்மா புத்ரா தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவைக்கேற்ப கூடுதல் தகவல்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




