Last Updated:
வாரணாசியில் 3வது காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை யோகி ஆதித்யநாத் தொடக்கி வைத்தார்.
வாரணாசியில் மூன்றாவது காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி கோலாகலமாகத் தொடங்கியது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த 2023ஆம் ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு – காசி இடையேயான ஆன்மிக உறவை வலுப்படுத்தும் வகையில் இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, 3 ஆவது காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். அப்போது, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக காசி தமிழ்ச் சங்கமம் புகைப்படக் கண்காட்சியை எல்.முருகன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அந்தக் கண்காட்சியில், அகத்தியர், திருவள்ளுவர், அவ்வையார், ஆண்டாள், வள்ளலார், ஜி.டி.நாயுடு, ஏ.பி.ஜே.அப்துல் கலாம் உள்ளிட்டோரின் பங்களிப்பு தொடர்பான குறிப்பு அடங்கிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
இதையும் படிக்க: தமிழகத்திற்கு நிதி: சட்டத்தில் இடமில்லை – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
மேலும் காசி தமிழ் சங்கமம் போல் எதிர்காலத்தில் தமிழகத்திலும் சங்கமம் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என எல்.முருகன் தெரிவித்தார். இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வரும் 24 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
Varanasi,Uttar Pradesh
February 15, 2025 7:16 PM IST


