Last Updated:
முல்லை பெரியாறு அணை மேற்பார்வைக் குழுவைக் கலைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. 142 அடி வரை மட்டுமே நீரை தேக்க உரிமை உள்ளது.
முல்லை பெரியாறு அணை மேற்பார்வைக் குழுவைக் கலைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், புனரமைப்பு பணிகள், பலப்படுத்தும் பணிகள் என அனைத்தையும் மேற்கொண்டாலும் 152 அடி வரை தண்ணீரை சேமித்து வைக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை என்றும் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை மட்டுமே நீரை தேக்கி வைக்க உரிமை உள்ளதாக கூறியுள்ளது.
தற்போதைய சூழலில் முல்லைபெரியாறு அணை பலவீனமாகவும், கேரளா மக்களிள் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளதாக தெரிவித்துள்ள கேரள அரசு, முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவதே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும் எனவும் கூறியுள்ளது.
மேலும் அணை பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட முல்லைப் பெரியாறு அணை கண்காணிப்பு மேற்பார்வை குழுவை கலைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
April 29, 2025 1:43 PM IST
முல்லை பெரியாறு அணை குழுவைக் கலைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை : கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல்


