நீதிபதிகள் மேலும் கூறுகையில், அணைப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 5(2)இன் கீழ், பிரிவு 5(1)இன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினா்களைக் கொண்ட தேசியக் குழு, இச் சட்டம் செயல்படத் தொடங்கிய நாளிலிருந்து 60 நாள்களுக்குள் அமைக்கப்பட வேண்டும். மேலும், அதன் பிறகு அக்குழு ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் மீண்டும் அமைக்கப்பட வேண்டும்.

