மதுரை முருகர் மாநாடு குறித்த விமர்சனங்கள்
மதுரையில் நடந்த முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்து விமர்சனங்கள் அடங்கிய வீடியோ ஒளிபரப்பட்டது குறித்த கேள்விக்கு, “அடிமை சாசனத்தை பாஜகவிடம் அதிமுக எழுதிவிட்டு மேடையில் அமர்ந்து கொண்டுள்ளனர். அண்ணாமலை இருக்கும் மேடையில் அதிமுகவினர் அமர்கிறார்கள். முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த விமர்சன வீடியோ வெளியீடு செய்யப்பட்டது. அதிமுகவினர் அடிமை சாசனம் எழுதி கொடுத்ததற்கு இதுவே உதாரணம்” என கூறினார். மதுரையில் நடைபெற்ற முருகர் மாநாடு ஆன்மீக மாநாடு அல்ல, அரசியல் மாநாடு என்று அமைச்சர் விமர்சித்தார். “அரசியலையும் ஆன்மீகத்தையும் கலக்காதீர்கள் என்பது எங்கள் நிலைப்பாடு. இந்த மாநாடு ஒரு நாள் கூத்து, கூடி கலைந்த மேகக் கூட்டம்,” என்றார். “அண்ணாமலை, எச்.ராஜா போன்றவர்கள் திராவிடத்தை அழிப்போம் என்று பேசுகின்றனர். ஆனால், இந்த மேடையில் அமர்ந்தவர்கள் தங்கள் இயக்கத்தை அடிமைப்படுத்தியுள்ளனர்,” என்றார்.

