மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்ற கொல்கத்தா, பட்டியலில் முதலிடத்தில் தொடருவதுடன், முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணியும் கொல்கத்தா அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. மழையின் காரணமாக 20 ஓவர் ஆட்டமானது 16 ஆட்டமாக குறைக்கப்பட்டது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 16 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கும் 157 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கொல்கத்தா அணியின் வெங்கடேஷ் ஐயர் 42 ரன்களும் நிதிஷ் ராணா 33 ரன்களும் எடுத்தனர். மும்பை அணியின் பும்ரா மற்றும் பியூஷ் சாவ்லா தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர்.
158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி தொடக்கத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 16 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன் எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை அணியுடன் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்க்கது.
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
