Last Updated:
கொச்சி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அறிக்கையில் மொத்தம் 29 முனையங்கள் கட்டப்படுவதாகவும், 10 வழித்தடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில், நவி மும்பை விமான நிலையத்துடன் வாட்டர் மெட்ரோ இணைப்பை ஏற்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
இந்திய வணிகர் சபை ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில், முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளரும், மும்பை மெட்ரோ ரயில்வே கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநருமான அஸ்வினி பிடே, நவி மும்பை விமான நிலையம் வரை வாட்டர் மெட்ரோவை விரிவுபடுத்துவது குறித்து தீவிர பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மும்பை சுற்றுச்சூழல் வாரத்தின் லோகோவை வெளியிட்ட பிடே, மகாராஷ்டிரா கடல்சார் வாரியத்தால் நீர் மெட்ரோவிற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தற்போது, கேரள மாநிலம் கொச்சி நகரில் வாட்டர் மெட்ரோ திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை வெற்றிகரமாக்கிய கொச்சி கப்பல் கட்டும் நிறுவனம், மும்பை பெருநகரப் பகுதியில் தொடங்கப்பட உள்ள வாட்டர் மெட்ரோ திட்டத்திற்கான ஆய்வறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, பல்வேறு போக்குவரத்து முறைகளில் மாற்று வழிகள் பயனுள்ளதாக இருக்கும் என்ற யோசனை குறித்து தீவிர பரிசீலனை நடந்து வருகிறது.
மும்பையில் வாட்டர் மெட்ரோ திட்டத்தை தொடங்குவதற்கான கணக்கெடுப்பை நடத்தும் பணி, கேரளாவைச் சேர்ந்த கொச்சி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் கடந்த ஜூன் மாதம் மகாராஷ்டிரா மீன்வளம் மற்றும் துறைமுக அமைச்சர் நிதேஷ் ராணேவிடம் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்தனர். பின்னர் மும்பையில் வாட்டர் மெட்ரோவிற்கான மேம்பாட்டுத் திட்டத்தை 3 மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளிடம் ராணே கேட்டுக் கொண்டார்.
கொச்சி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அறிக்கையில் மொத்தம் 29 முனையங்கள் கட்டப்படுவதாகவும், 10 வழித்தடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெட்டி டெர்மினலில் பயணிகளுக்கான வசதிகளை நிர்மாணித்தல், படகுகள் வாங்குதல் போன்றவற்றை உள்ளடக்கிய இந்த திட்டத்திற்கு மொத்தம் ரூ.2,500 கோடி செலவாகும். கொச்சி வாட்டர் மெட்ரோ என்பது கேரளாவின் கொச்சியில் உள்ள ஒரு பொதுப் போக்குவரத்து அமைப்பாகும். இந்தத் திட்டம் 16 வழித்தடங்கள், 38 டெர்மினல்கள் மற்றும் சுமார் 75 கி.மீ நீர்வழிகளைக் கொண்ட திட்டமிடப்பட்ட வலையமைப்பை உள்ளடக்கியது.
நிலத்தடி மெட்ரோவில் மொபைல் போன் நெட்வொர்க் கிடைக்காத பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும். அனைத்து நிலத்தடி வழித்தடங்களிலும் 5G நெட்வொர்க்கை வழங்க பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது தவிர, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டிடம் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சருக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். விரைவில் நேர்மறையான பதில் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த பிடே, தற்போது, டிக்கெட் கவுண்டர் பகுதியில் Wi-Fi சேவை கிடைக்கிறது. இப்போது, மெட்ரோ பிளாட்ஃபார்களிலும் இந்த வசதியை வழங்க திட்டங்கள் நடந்து வருகின்றன.
மெட்ரோ நிலையங்களிலிருந்து பிற இடங்களுக்குச் செல்ல பெஸ்ட் பேருந்து சேவைகளை இணைக்கும் திட்டங்கள் நடந்து வருவதாக பிடே மேலும் கூறினார். தற்போது, பெஸ்ட் நிறுவனத்திடம் சுமார் 2,500 பேருந்துகள் உள்ளன, ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த எண்ணிக்கை 4,500 ஆக இருந்தது. மும்பைக்கு குறைந்தது 10,000 பேருந்துகள் தேவை. எனவே, வரும் நாட்களில் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
November 08, 2025 5:00 PM IST


