• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘முன்பு கேலி செய்தவர்கள் இன்று என் மகனை பாராட்டுகின்றனர்…’ – யஷ் தயாளின் தந்தை நெகிழ்ச்சி….

GenevaTimes by GenevaTimes
May 22, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
‘முன்பு கேலி செய்தவர்கள் இன்று என் மகனை பாராட்டுகின்றனர்…’ – யஷ் தயாளின் தந்தை நெகிழ்ச்சி….
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தனது மகனின் மோசமான ஆட்டத்திற்காக முன்பு கேலி செய்தவர்கள், சென்னை அணியுடனான வெற்றிக்கு பின்னர் பாராட்டு தெரிவிப்பதாக, ஆர்சிபி பவுலர் யஷ் தயாளின் தந்தை நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

யஷ் தயாள் என்ற பெயரை சென்னை அணி ரசிகர்கள் இனி அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். ஏனென்றால் இவர் வீசிய ஓவர்தான் வெற்றியை சென்னையிடம் இருந்து பறித்து அப்படியே ஆர்சிபியிடம் கொடுத்தது. நடப்பு ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய லீக் போட்டியாக சென்னை மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய போட்டி நேற்று முன்தினம் பெங்களூருவில் நடந்தது.

விளம்பரம்

போட்டி தொடங்குவதற்கு முன்பாக, மழை பாதிப்பு, அதிக நெட் ரன்ரேட் உள்ளிட்ட சாதகமான அம்சங்கள் சென்னை அணிக்கு காணப்பட்டன. குறிப்பாக மழை குறுக்கிட்டால் ஆட்டம் கைவிடப்பட்டு எளிதாக சென்னை அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு இருந்தது. அத்துடன் டாஸிலும் சென்னை அணி வெற்றி பெற்றதால், ப்ளே ஆஃப் உறுதி என்ற கொண்டாட்ட மனநிலைக்கு சென்னை அணி ரசிகர்கள் சென்றனர்.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்கள் முடிவில் 218 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் பேட்டிங் செய்த சிஎஸ்கே வெற்றி பெற 219 ரன்கள் இலக்காக இருந்தாலும், 201 ரன்கள் எடுத்தாலே ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லலாம் என்பதால் அதனை டார்கெட்டாக கொண்டு விளையாடினர்.

விளம்பரம்

கடைசி ஓவரில் வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டபோது முதல் பந்தை தோனி சிக்சருக்கு பறக்கவிட்டார். இந்த பந்து ஸ்டேடியத்தை தாண்டி வெளியே சென்றதால், புதிய பந்து வழங்கப்பட்டது. அது பவுலிங்கிற்கு நன்றாக கைகொடுத்தால், அடுத்த பாலில் தோனி ஆட்டமிழந்தார். கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டபோது, ரவிந்திர ஜடேஜாவால் 1 ரன் கூட எடுக்க முடியவில்லை.

அத்துடன் சென்னை அணியின் ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் ஆர்சிபிக்காக கடைசி ஓவரை வீசிய யஷ் தயாள ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். முதல் பந்தை தோனி சிக்சர் அடித்த பின்னர், அவர் பொறுமையாக மீதமுள்ள 5 பந்துகளையும் வீசிய விதம் பாராட்டை பெற்றது.

விளம்பரம்

இதையும் படிங்க – ஐபிஎல் 2024: பிளே ஆஃப் போட்டிகளின் முழு அட்டவணை – வெல்லப்போவது யார்?

இதே யஷ் தயாள் தான், கடந்த முறை குஜராத் அணிக்காக விளையாடியபோது ஒரே ஓவரில் 5 சிக்சர்களை கொடுத்து அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தார். பின்னர் அவர் குஜராத் அணியால் விடுவிக்கப்பட்ட நிலையில் அவரை ரூ. 5 கோடி கொடுத்து ஆர்சிபி 2024 சீசனுக்காக வாங்கியது. இந்நிலையில் யஷ் தயாள் குறித்து அவரது தந்தை கூறியதாவது-

விளம்பரம்

ஆர்சிபி யஷ் தயாளை ரூ. 5 கோடிக்கு வாங்கியபோது, ​​ஆர்சிபி தனது பணத்தை சாக்கடையில் வீணடித்ததாக ஒருவர் சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது. எல்லோரும் அப்படித்தான் சொன்னார்கள். ஆனால் இன்று எனக்கு நிறைய நல்ல செய்திகளும் அழைப்புகளும் வருகின்றன. முதல் பந்தில் தோனி சிக்சர் அடித்த பிறகு, அப்படியே கைகளை கூப்பி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன். கடவுளே, இன்று என் குழந்தைக்கு ஆதரவளிக்கவும், இது மீண்டும் நடக்கக்கூடாது என்று பிரார்த்தித்தேன். முதல் பந்திற்குப் பிறகு எனது மகன் பொறுமையைக் கடைப்பிடித்த விதம் எனக்குப் பிடித்திருந்தது. முன்பு கேலி செய்தவர்கள் இன்று என் மகனை பாராட்டுகிறார்கள் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

.

Read More

Previous Post

Ramadoss: தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பள்ளிகளை நடத்துவது தான் திமுக அரசின் சாதனையா? – விளாசும் ராமதாஸ்!-pmk founder ramadoss slams dmk government over government school job vacancy

Next Post

உங்களுக்கு இரண்டு குழந்தைகளா? போஸ்ட் ஆபீஸின் இந்த திட்டம் மூலம் ரூ.6 லட்சம் பெறலாம்

Next Post
உங்களுக்கு இரண்டு குழந்தைகளா? போஸ்ட் ஆபீஸின் இந்த திட்டம் மூலம் ரூ.6 லட்சம் பெறலாம்

உங்களுக்கு இரண்டு குழந்தைகளா? போஸ்ட் ஆபீஸின் இந்த திட்டம் மூலம் ரூ.6 லட்சம் பெறலாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin